என் மலர்
நீங்கள் தேடியது "All India Youth Congress"
- ஏழை மாரியம்மன் கோவில் நாவிதர் மடத்தில் நடந்த வில்லியனூர் கொம்யூன் மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கொம்யூன் தலைவர் பெர்னோ தலைமை தாங்கினார்.
- வில்லியனூர் பகுதியில் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைத்து அனைத்து பாடப்பிரிவுகளுடன் தனி வளாகத்தில் செயல்படுத்திட வேண்டும்.
புதுச்சேரி:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் வில்லியனூர் கொம்யூன் மாநாடு நடந்தது. ஏழை மாரியம்மன் கோவில் நாவிதர் மடத்தில் நடந்த வில்லியனூர் கொம்யூன் மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கொம்யூன் தலைவர் பெர்னோ தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்ரீதரன், அருண்குமார், ரியாக்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முன்னாள் தேசிய குழு உறுப்பினர் சரவணன் மாநாட்டு கொடி ஏற்றி உரையாற்றினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் இரா.அந்தோணி மாநாட்டு தொடக்க உரையாற்றினார். கொம்யூன் செயலாளர் பெஞ்சமின் வேலை அறிக்கை வாசித்தார்.
இதில் சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் அந்துவான், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் பெருமாள், துணை செயலாளர் எழிலன், பாலகிருஷ்ணன், உதயராஜ் ,கோவிந்தராஜ், பெருமாள், பிரவீன்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வில்லியனூர் பகுதியில் பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைத்து அனைத்து பாடப்பிரிவுகளுடன் தனி வளாகத்தில் செயல்படுத்திட வேண்டும். வில்லியனூர் முழுவதும் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்படுத்திடவும், மீன் மார்க்கெட்டை கட்டி முடித்து திறந்திடவும், கஸ்தூரிபாய் காந்தி திருமண நிலையத்தை திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில கொம்யூன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






