என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress malavika mohanan"

    • தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார்.
    • தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

    கேரளாவில் இருந்து கோலிவுட் வந்து பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.


    மாஸ்டர் படமும் ஹிட்டானதால் கோலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார் மாளவிகா. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

    தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.


    இந்நிலையில் தங்கலான் புரமோஷனின் போது டார்க் ரெட் கலர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.

    • நடிகர், நடிகை இடையே நல்ல உறவு இருக்க வேண்டும்.
    • நானும், நடிகர் சித்தாந்தும் எப்படியோ நடித்து விட்டோம்.

    தமிழில் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், விக்ரமுடன் தங்கலான் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் தற்போது இந்தியில் யூத்ரா படத்தில் நடித்து இருக்கிறார். இதில் அவர் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

    இதுகுறித்து மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதுமாதிரி காட்சிகளை படமாக்கும்போது எல்லா சினிமா படப்பிடிப்பு அரங்கிலும் ஒரு இண்டிமேட் கோ ஆர்டினேட்டரை நியமிப்பார்கள்.

    நடிகர் - நடிகைகள் கூச்சப்படாமல் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர்கள் சொல்லி கொடுப்பார்கள். இது நல்ல முடிவு. ஆனால் எங்கள் அரங்கில் இதுபோன்ற கோ ஆர்டினேட்டர்ஸ் யாரும் இல்லை.

    ஆனாலும் நானும், நடிகர் சித்தாந்தும் எப்படியோ நடித்து விட்டோம். முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதான காரியம் இல்லை. நடிகர், நடிகை இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். சவுகரியமான சூழல் இருக்க வேண்டும்'' என்றார்.

    ×