என் மலர்
நீங்கள் தேடியது "ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்"
- 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
- உதயம் இனி தேசிய அளவிலான பிராண்டாக மாற்றப்படும் என்று ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான 'உதயம்' பிராண்டை ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் உதயம் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, உதயம்ஸ் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் பெரும்பான்மையான பங்குகளைக் வைத்திருக்கும். அதேநேரம், பழைய உரிமையாளர்கள் ஒரு சிறிய பங்கைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் உதயத்தின் பருப்பு வகைகள், அரிசி, மசாலாப் பொருட்கள், தின்பண்டங்கள் போன்றவை தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தமிழ்நாட்டின் பாரம்பரியமான மற்றும் நம்பகமான இந்த பிராண்டை, ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
குறைந்த விலையில் உதயம் இனி தேசிய அளவிலான பிராண்டாக மாற்றப்படும் என்று ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தென்னிந்தியாவின் உணவுப் பொருட்கள் சந்தையில் ரிலையன்ஸ் தனது பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
- பங்குகளின் விலை 22 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.
- ஜியோ ஐபிஓ திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகலாம்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டெட் தனியாக பிரிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜியோ நிறுவனத்தின் மதிப்பீடு ரூ. 9.3 லட்சம் கோடிகள் வரை இருக்கும் என்று முன்னணி முதலீட்டு நிறுவனமான ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் பிட்டியலிடும் போது மதிப்பீட்டை 112 பில்லின் டாலர்கள் வரை நிர்ணயிக்கும் என்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையை விட 7 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 3,580 வரை இருக்கும் வகையில் ரேட்டிங் இருந்ததாக ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய பங்குசந்தை நிறைவு நேரத்தில் இருந்த தொகையை விட 13 சதவீதம் வரை குறைவு ஆகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை 22 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. சிறு பங்குதாரர்களுக்கு ஒட்டுமொத்த ஐபிஓ-வும் விற்பனைக்கு கிடைக்கலாம் என்றும் ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஜியோ ஐபிஓ திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






