என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.
- ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.
சங்கரரின் பாஷ்யம் 'சங்கர பாஷ்யம்' என்று வழங்கப்பட்டது. ராமானுஜரின் பாஷ்யம் ராமானுஜபாஷ்யம் என்ற வழங்கப்பட்டது.
ராமானுஜருக்கு முன்பே விசிஷ்டாத்வைத வேதாந்தம் இருந்து வந்திருக்கிறது.
போதாயனரைத் தவிர டங்கர், குகதேவர், முதலானோர், விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
ராமானுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்ய நூலே ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத கொள்கைக்கு ஆதார நூல் என்பது பெரும்பாலோரது கருத்தாக இருந்து வருகிறது.
காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.
பக்தி சரணாகதியை ஆதாரமாகக் கொண்டே சேவையை மையமாகக் கொண்டதுதான் விசித்டாத்வைத கொள்கையாக இருந்து வந்தது.
விசேஷத்தன்மை பொருந்திய அத்வைதம்தான் விசிஷ்டாத் வைதம் ஒன்றுடன் ஒன்றினைந்த ஒன்றுடன் அடங்குவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது தான் விசிஷ்டாத்வைதம்.
ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.
ஸ்ரீராமானுஜர் கூற கூரத்தாழ்வார் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்ததும் தமது மருமகன் நடாதூராழ்வார் வசம் ஸ்ரீபாஷ்யத்தை கொடுத்து காஷ்மீரத்திலிருக்கும் ஸ்ரீசாரதா பீடத்துக்கு அனுப்பி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் நூல் தெய்வீக வேதமறை விஞ்ஞான பொக்கிஷமாக அள்ள அள்ள குறையாத ஞான சமுத்திரமாய் இறைவனின் அருகாமையை உணர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.
- கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.
ஆனால் அந்த நாட்டு பண்டிதர்களோ இதனால் மிகவும் பகைமை கொண்டனர்.
ராமானுஜரை பின்தொடர்ந்து கண்காணித்து அந்த நூலை அவரிடம் இருந்து திருடிக் கொண்டு போய்விட்டதும் ராமானுஜர் கலங்கிப் போனார்.
இதனைக்கண்ட கூரத்தாழ்வார், "தேவரீர் தயவு செய்து கலங்க வேண்டாம்.
நான் ஒருமுறை அந்த நூல் முழுவதையும் படித்துவிட்டேன்.
தாங்கள் களைத்துப்போய் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அதைப்படித்தேன்.
அதில் உள்ள பொருட்களை இப்போதே சொல்ல வேண்டுமா அல்லது இரண்டாற்றுக்கிடையே வந்து சொன்னால் போதுமா" என்று கேட்டார்.
ராமானுஜர் கூரத்தாழ்வாரின் கல்வி நினைவாற்றல் கண்டு மெய்சிலிர்த்தார்.
"கூரத்தாழ்வாரே ! நான் சொல்லச்சொல்ல நீர் பாஷ்ய வாக்கியங்களை எழுதிக்கொண்டே வாரும்.
நான் சொல்லும் வாக்கியங்களுக்கும் உமது நினைவில் இருக்கும் வாக்கியங்களுக்கும் ஏதேனும் முரண் இருப்பதாக புலப்பட்டால் நீர் எழுதுவதை நிறுத்திவிடும்" என்ற ராமானுஜர் கூறவும் அவரும் சம்மதமாய் எழுதத்தொடங்கினார்.
ராமானுஜர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டே வந்த கூரத்தாழ்வார் ஒரு சமயம் எழுதுவதை நிறுத்திவிட்டார்.
ராமானுஜர் கூறியது பக்தி மார்க்க மதமாகிய விசிஷ்டாத் வைத கொள்கைக்கு முரணாக இருந்ததால் தான் கூரத்தாழ்வார் அப்படி எழுதுவதை நிறுத்தியபடி இருந்தார்.
இராமானுஜர் அதனைக்கண்டு கடும் கோபம் கொண்டார்.
"நான் சொன்னதை எழுத உமக்க இஷ்டம் இல்லையென்றால் நீரே பாஷ்யம் எழுதிக்கொள்ளும்" என்று ராமானுஜர் எழுந்து போய்விட்டார்.
ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.
கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.
அதன்பின் அந்த வாக்கியத்தை திருத்திச்சொல்ல கூரத்தாழ்வார் எழுதத்துவங்கினார்.
- பண்டிதர்கள் இதனைக் கேட்டதும் முகம் சுளித்தனர். ராமானுஜருக்கு அதனைக் காண்பிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டனர்.
- அதனை அறிந்து அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
மகரிஷி போதாயனர் லட்சம் கிரந்தங்களில் பிரம்ம சூத்திர பாஷ்யம் செய்திருக்கிறாரே அதைச் சங்கரர் கூட குறிப்பிட்டு இருக்கிறாரே அதனை நான் படித்து பார்க்க விரும்புகிறேன் என்று ராமானுஜர் தெரிவித்தார்.
பண்டிதர்கள் இதனைக் கேட்டதும் முகம் சுளித்தனர்.
ராமானுஜருக்கு அதனைக் காண்பிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டனர்.
அதனை அறிந்து அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
ஒருவழியும் தோன்றாது கடைசியாய் காஷ்மீரத்து மன்னரிடம் சென்றார்.
எனது குருநாதர் ஸ்ரீரங்கத்து ஸ்ரீஆளவந்தார் ஆணைப்படி ஸ்ரீபாஷ்யம் நூல் எழுதும் பொருட்டு காஷ்மீருக்கு நெடும் பயணம் மேற்கொண்டு வந்துள்ளேன்.
எனக்கு இங்குள்ள போதாயன விருத்தி நூலை ஒருமுறை வாசித்து பார்ப்பதற்கு அனுமதி தந்தால் மிகவும் உவகை அடைவேன் என்றார் ராமானுஜர்.
ராமானுஜரது முக வசீகரமும் காந்த சக்தியும் அரசனை கவர்ந்து அவரது ஆழ்ந்த புலமையையும் கண்ணுற்று அந்த போதாயன விருத்தி ஏட்டை நீங்கள் உங்கள் நாட்டுக்கே எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்தார்.
அனுமதி அளித்ததோடு ராமானுஜரிடம் அந்த நூலையும் அளித்துவிட்டார் அரசர்.
- கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.
- கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஸ்ரீ ஆளவந்தார் திருவுள்ளப்படி ஸ்ரீபாஷ்யம் என்கிற வேதாந்த நூல் எழுதி முடிக்கும் திருப்பணியில் கவனம் செலுத்த திருக்கோவிலில் முறையிட்டதும், ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் நூலுக்காக காஷ்மீர் தேசம் செல்ல உத்தேசிக்கப்பட்டது.
காஷ்மீர் தேசத்தில் தான் ஸ்ரீபாஷ்யம் நூலுக்கான போதாயன சூத்திர விருத்தியுரை நூல் இருந்து வந்தது.
ஸ்ரீராமானுஜர் காஷ்மீர் தேசத்துக்கு செல்வதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் திருக்கோவில் கட்டளைகளை நிறைவேற்றி சில திட்டங்கள் வகுக்கப்பட்டன.
கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.
கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சகல பரிவார பரிபாலன மேற்பார்வை விசாரணைகளுக்கு அகளங்க சோழனும் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ராமானுஜர் அதன்பின் தன் பயணத்திற்கு எப்பொழுதும் நிழலாக இருக்கும் கூரத்தாழ்வாரை துணையாக அழைத்துக் கொண்டு காஷ்மீர் பயணம் சென்றார்.
காஷ்மீரில் ராமானுஜர் பாண்டிதர்களைச் சந்தித்து வேதவேதாந்த விஷயங்கள் சம்பந்தமாக கலந்து உரையாடினார்.
ராமானுஜரது புலமையும் அறிவுக் கூர்மையும் வாக்கு வன்மையும் ஞான வேட்கையும் எல்லோரையும் பிரமிக்கச் செய்தன.
- எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.
- வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.
மேல்கோட்டைக்கு அழைத்து வந்த ஏழை எளியவர்களில், கடையருக்கும் கடையராக் கருதப்படும் பஞ்சமர்களின் பகவத்தைங்கரியத்தை நினைவு கூர்ந்து ராமானுஜர் பெருமிதம் கொண்டார்.
அந்த மக்கள் அனைவரையும் அழைத்து, நன்னெறிக் கோட்பாடுகளை உபதேசித்து வைணவர்கள் ஆக்கினார்.
திருநாராயண சுவாமி கோவில், ஸ்ரீரங்கப் பட்டணத்திலும் பேலூரிலுமுள்ள பெருமாள் கோவில்கள் போன்ற எல்லா வைணவக் கோவில்களுக்குள்ளும் எல்லோரையும் போன்றே இவர்களும் சென்று இறைவழிபாடு செய்யலாம் என்றும், கோவிலுக்கு அருகில் வெட்டப்பட்ட குளத்தில் இருந்து நீர் எடுத்து வரலாம் என்றும் ராமானுஜர் அறிவித்தார்.
தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட பஞ்சமர்களை மகாத்மா காந்தி "அரிஜன்", (விஷ்ணுவுக்குப் பிரியமானவர்கள்) என்று அழைத்தார்.
ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்னரே ராமானுஜர் அவர்களை "திருக்குலத்தார்" எனக் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.
வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.
இவ்விதம் வைணவராகி, தொண்டர் குலத்தைச் சேர்ந்தவர்களை, அவர்களுடைய பண்டைக் குலத்தைக் குறிப்பிட்டுப் பேசுவது மகாபாவம் ஆகும் என்றார் ராமானுஜர்.
இவ்விதம் பழிப்பவர்களுக்கு அடுத்த ஜன்மத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ தண்டனை கிடைக்கும் என்பதில்லை, இந்த ஜன்மத்திலேயே, பழித்துக் கூறிய அதே இடத்தில் தண்டனை உடனே கிடைக்கும் என்று ராமானுஜர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.
- வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.
இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.
வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.
ஆசையுடையோர்க் கெல்லாம் வைணவ மகாமந்திரம் பொதுவானது. வைணவர் அனைவரும் ஒரே குலம் தொண்டர் குலம் என்றார் உடையவர்.
தாகம் தீர்த்தார்
சமயத் தொண்டில் மட்டுமின்றி சமூகத் தொண்டிலும் ராமானுஜர் ஆர்வம் காட்டினார்.
இவருடைய பொதுஜன சேவைக்கு மகுடம் இட்டாற்போலத் திகழ்வது மோதிதலாப் (முத்துக்குளம்) என்று அழைக்கப்படும் நீர்த்தேக்கம்.
தலைநகரின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இந்த நீர்த்தேக்கத்தை உருவாக்கம் திட்டத்தைத் தீட்டியவர் ராமானுஜர் தான்.
குன்றுகளுக்கு இடையே முக்கோண வடிவில் அமைந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து சென்ற சிற்றாற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்டி நீர்நிலையை உருவாக்க வேண்டும் என்று விஷ்ணுவர்த்தன ராயனிடம் ராமானுஜர் எடுத்துரைத்தார்.
அதன்படியே நீர்த்தேக்கம் உருவானது.
இரண்டரை மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்ட இந்தப் பெரிய ஏரி இன்றும் கூட மக்களின் தாகத்தைத் தணித்து, ராமானுஜரின் புகழ் பாடுகிறது.
1. மதுராந்தகம்
2. திருஅத்தியூர்
3. திருவரங்கம்
4. திருக்கோட்டீயூர்
5. திருக்கரம்பனூர்
6. திருவெள்ளறை
7. திருக்கோவலூர்
8. திருக்கடிகை
9. திருவேங்கடம்
10. திருப்புட்குழி
11. திருவெக்கா
12. திருவாலி திருநகரி
13. திருமுட்டம்
14. திருஇந்தளூர்
15. திருவழுந்தூர்
16. திருவிண்ணகரம்
17. திருநறையூர்
18. திருக்குடந்தை
19. திருப்போர்நகர்
20. திருமாலிருஞ்சோலை
21. திருமெய்யம்
22. திருமோகூர்
23. திருக்கூடல்
24. திருப்புல்லாணி
25. திருத்தண்கால்
26. திருவில்லிபுத்தூர்
27. திருவைகுந்தம்
28. திருவரகுணமங்கை
29. திருப்புளிங்குடி
30. திருத்தொலைவில்லி மங்கலம்
31. திருக்குளந்தை
32. திருத்தென்திருப்பேரை
33. திருக்குருகூர்
34. திருக்கோளூர்
35. திருக்குறுங்குடி
36. திருவண்பரிசாரம்
37. திருவட்டாறு
38. திருவனந்தபுரம்
39. திருப்புலியூர்
40. திருவாறன்விளை
41. திருச்செங்குன்றூர்
42. திருவண்வண்டூர்
43. திருவல்லவாழ்
44. திருக்கடித்தானம்
45. திருமூழிக்களம்
46. திருக்காட்கரை
47. திருவித்துவக்கோடு
48. திருவஞ்சிக்களம்
49. திருநாவாய்
50. திருத்துவாரகை
51. திருப்புட்கரம்
52. திருவாய்ப்பாடி
53. திருவிருந்தாவனம்
54. திருவடமதுரை
55. கோவர்த்தனகிரி
56. குருட்சேத்திரம்
57. திருவரித்துவார்
58. திருக்கண்டமெனுங்கடிநகர்
59. திருப்பிரிதி
60. திருவதரிகாச்ரமம்
61. திருவயோத்தி
62. திருநைமிசாரண்யம்
63. காசி
64. கயை
65. திருச்சாளக்கிராமம்
66. காஷ்மீர்&ஸ்ரீநகர்
67. பூரிசெகந்நாதம்
68. திருக்கூர்மம்
69. திருக்காகுளம்
70. வாராங்கல்
71. சிம்மாசலம்
72. திருச்சிங்கவேள்குன்றம்
73. திருவல்லிக்கேணி
74. திருமயிலை
75. திருநீர்மலை
76. திருநின்றவூர்
77. திருஎவ்வுள்
78. திருநீரகம்
79. திருவூரகம்
80. திருக்காரகம்
81. திருக்கார்வானம்
82. திருபெரும்புதூர்
83. திருக்கடல்மல்லை
84. திருவிடவெந்தை
85. திருவயிந்திபுரம்
86. வீரநாராயணபுரம்
87. திருச்சித்திரக்கூடம்
88. திருக்காழீச்சீராமவிண்ணகரம்
89. திருக்காவளம்பாடி
90. திருஅரிமேயவிண்ணகரம்
91. திருவண்புருடோத்தமம்
92. திருச்செம்பொன்செய்கோவில்
93. திருமணிமாடக்கோவில்
94. திருவைகுந்தவிண்ணகரம்
95. திருத்தேவனார்தொகை
96. திருத்தெற்றியம்பலம்
97. திருமணிக்கூடம்
98. திருவெள்ளக்குளம்
99. திருப்பார்த்தன்பள்ளி
100. திருத்தலைச்சங்கநாண்மதியம்
101. திருச்சிறுபுலியூர்
102. திருக்கண்ணபுரம்
103. திருச்சேறை
104. திருக்கண்ணமங்கை
105. திருக்கண்ணங்குடி
106. திருநாகை
107. தொண்டனூர்
108. திருநாராயணபுரம்
1. ஸ்ரீபாஷ்யம்
2. ஸ்ரீமத் கீதாபாஷ்யம்
3. வேதாந்த தீபம்
4. வேதாந்த ஸாரம்
5. வேதார்த்த ஸங்க்ரஹம்
6. சரணாகதி கத்யம்
7. ஸ்ரீரங்க கத்யம்
8. ஸ்ரீவைகுண்ட கத்யம்
9. நித்யம்
அடைந்தோர் சரணாகதியும் அனைத்துயிர் உய்வதற்கே
அடைந்தநம் இராமானுசனை அடைந்தவர் உய்ந்தோம் இங்கே
கடைந்தநல் வேதசாரம் கலியுகந் தன்னில் நாமும்
அடைந்தநம் இராமனுசனே! அவனடி வாழி! வாழி!!
- ஒன்றும் புரியாமல் அர்ச்சகர்களை இதென்ன ராமானுஜர் விநோதம் செய்கிறார் என்று எண்ணியவராய்
- அந்த சீட்டை ஸ்ரீவேங்கடாசலபதி முன் வைக்கப்போனபோது பெருமாள் அதனை கை நீட்டி பெற்றுக்கொண்டார்.
திருமலை திருப்பதியில் ஸ்ரீராமானுஜர் மற்றும் சீடர்குழாம் தங்கியிருந்தபோது ஒரு இடைச்சி தயிர் கொண்டுவந்தாள்.
அவளிடம் இவர்கள் தயிரை வாங்கிக்குடித்தனர். தயிர் என்ன விலை என்று கேட்டனர்.
அவர்கள் குடிக்க குடிக்க கொடுத்துக்கொண்டே இருந்தாள். அவருக்கு அந்த வைஷ்ணவர்களைப் பார்த்து பரவசம் உண்டாயிற்று.
பக்தி ஞானப்பற்றுதல் உண்டாயிற்று.
"எனக்கு பணம் எதுவும் வேண்டாம். எனக்கு சம்சாரபந்தம் விட்டு நல்ல மோட்ச மார்க்கம் கிடைக்க வழிசெய்யுங்கள்" என்று அவள் அவர்களைக் கேட்டுக் கொண்டாள்.
"உன்னால் மோச கதி அடைய முடியும், நாங்கள் மோட்சம் கொடுக்கும் தகுதியற்றவர்கள் அதனைக்கொடுப்பவர் திருமலையின் மீது அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் கேள்" என்றார் யதிராஜர் என்ற ஸ்ரீராமானுஜர்.
உங்களைப்பார்த்ததும் உங்களால் எனக்கு மோட்சம் கொடுக்க முடியும் என்று முதலில் கருதிவிட்டேன்.
ஆனால் திருமலை மீது இருப்பவர் பேசமாட்டாரே. தாங்கள் ஒரு சீட்டெழுதி சிபாரிசு செய்து மோசமளிக்கும்படி செய்யுங்கள். என்றாள் அவள்.
ஸ்ரீயதிராஜரும் அவ்வாறே இசைந்து ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஒரு சீட்டு எழுதிக்கொடுத்தார்.
யதிராஜர் எனும் ராமானுஜரை சுற்றி நின்று கொண்டிருந்த அனைவரும் இது என்ன வேடிக்கையும் விநோதமுமான செயலாய் இருக்கிறது என்று எண்ணினார்கள்.
ஆனால் கொண்டி எனும் அந்த இடைச்சியோ அந்த சீட்டோலையை சந்தோஷமாக ராமாஜரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஸ்வாமி புஷ்கரணியில் சநானம் செய்துவிட்டு பிரதட்ஷண்யமாக வந்து ஸ்ரீவேங்கடாசலபதியைத் தொழுதாள் ஸ்ரீராமானுஜர் கொடுத்த சீட்டோலையை பெருமான் சன்னதியில் சமர்ப்பித்தாள்.
"இது என்ன சீட்டு" என்று அர்ச்சகர்கள் கேட்டனர்.
ஸ்ரீயதிராஜ சாமி பெருமாளுக்கு கொடுக்கச் சொன்ன சீட்டுதான் இது" என்றாள் கொண்டி.
ஒன்றும் புரியாமல் அர்ச்சகர்களை இதென்ன ராமானுஜர் விநோதம் செய்கிறார் என்று எண்ணியவராய் அந்த சீட்டை ஸ்ரீவேங்கடாசலபதி முன் வைக்கப்போனபோது பெருமாள் அதனை கை நீட்டி பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த ஸ்ரீஉடையவராகிய ராமானுஜரின் சீட்டு என்று அறிந்த மாத்திரத்தில் கொண்டியைப் பார்த்து "உனக்கு மோட்சம் கொடுத்தேன்" என்றருளினார்.
அப்போது பிரகாசமான ஒளியுடன் ஒரு விமானம் வந்தது இடைச்சி கொண்டி அதில் ஏறி அமர, அது பறந்து பரமபதம் சேர்ந்தது.
தயிர் விற்ற பெண்ணுக்கு மோட்சமா? ஆம் ஸ்ரீயதிராஜர் எழுதிக் கொடுத்த சீட்டுக்கு அத்தகைய மகத்துவம் இருந்தது.
- ராமானுஜர் அதை நினைவில் கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது அக்காரவடிசில் நைவேத்யம் செய்தார்.
- அப்போது ஆண்டாள் சந்நிதியில் ஓர் அற்புதம்நடந்தது.
ஆளவந்தாரின் அனைத்து எண்ணங்களையும் பூர்த்தி செய்து விட்டு திருப்பதியில் ராமானுஜர் வைணவ பிரசாரம் செய்வதற்காக யாத்திரை மேற்கொண்டார்.
எழுபத்தி நான்கு சீடர்களும் பிற வைணவ அடியவர்களும் பின்தொடர ராமானுஜர் திவ்விய தேசங்கள் என அழைக்கப்படும் திருப்பதிகளுக்கும் இதர தலங்களுக்கும் யாத்திரை கிளம்பினார்.
முதலில் சோழ நாட்டுப்பகுதிகளில் அவர் யாத்திரை செய்தார்.
திருமங்கை ஆழ்வார் அவதரித்த ஊரில் அவர்கள் விஜயம் செய்த போது பாதையில் அவர்களுக்கு எதிரே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி வந்தாள்.
அவளைப்பார்த்த ராமானுஜரின் சீடர்களில் ஒருவர், "பெண்ணே, ஒதுங்கி நில்" என்ற ஜாதிய வெரியுடன் உத்தரவிட்டார்.
உடனே அப்பெண், "நான் எந்தப்பக்கம் ஒதுங்க வேண்டும்? திருக்கண்ணபுரம் கோயிலை நோக்கியா? வலதுபுறத்தில் தெரியும், திருமால் தரிசனம் தந்த, திருமணங்ககொல்லையை நோக்கியா? இடதுபுறத்தில் உள்ள திருவாலிப்பெருமானை நோக்கியா? ஓங்கி உலகளந்த பரமானந்தன் எங்கும் நீக்கமற எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கும் போது நான் எந்தத்திசையைப்பார்த்து எந்தப்பக்கம் ஒதுங்கட்டும்? நீங்களே சொல்லுங்கள்" என்று திருத்தமாய் பேசியதும் ராமானுஜர் உள்ளிட்ட அங்கிருந்த அனைவருக்கும் பகீரென்று இருந்தது.
ஒருவராலும் பதில் பேச முடியவில்லை.
ராமானுஜர் தம் சீடர் சார்பாக அப்பெண்மணியிடம் மன்னிப்புக்கேட்டார்.
" எங்கள் சரீரத்தில் இடம் பெற்றுள்ள இந்த வைணவ சின்னங்கள் அனைத்தும் உனக்கே உரித்தவை, உனக்கே தகுதியானவை" என்ற அப்பெண்ணிடம் ராமானுஜர் உருக்கத்தோடு கூறினார்.
அப்பெண்மணி ராமானுஜரிடம் வணங்கி ஆசி பெற்றார்.
ராமானுஜர் அவரை வைணவ பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஸ்ரீரங்கம் மடத்திலேயே இருக்குமாறு கேட்டக்கொள்ள, அவளும் அப்படியே செய்தாள்.
அதன் பிறகு ராமானுஜர் கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
தொடர்ந்து பாண்டிய நாட்டு பாடல் பெற்ற தலங்கள், தென்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் ஆகிய பகுதிகளுக்கு எல்லாம் ராமானுஜர் சென்றார். அவர் சென்ற இடம் எல்லாம் வைணவம் வளர்ந்தது. நாராயணன் புகழ்பரவியது.
ராமானுஜர், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் தவம் இருந்த புனித மரத்தடியை தரிசித்தார். திருவாய்மொழி உருவான இடம் அது தான் என்றும் நம்பப்படுகிறது.
இப்படியாகத் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் ஆலயம் வரை ராமானுஜரின் தீர்த்த யாத்திரை தொடர்ந்து . அதன்பிறகு துவாரகை, காஷ்மீரம், ஹரித்வார், பத்ரிநாத் ஆகிய வடநாட்டு தலங்களுக்கும்அவர் சென்றார்.
ராமானுஜர் பாண்டிய நாட்டுக்கு யாத்திரை சென்ற போது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் சென்றார்.
ஆண்டாள் திருமாலுடன் இணைவதற்கு முன்பாக தன் திருக்கல்யாணத்துக்கு நூறு அண்டாக்கள் அக்காரவடிசில் (சர்க்கரைப்பொங்கல்) சீர்வேண்டும் எனக்கேட்டிருந்தார்.
ராமானுஜர் அதை நினைவில் கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது அக்காரவடிசில் நைவேத்யம் செய்தார்.
அப்போது ஆண்டாள் சந்நிதியில் ஓர் அற்புதம்நடந்தது. சிலைவடிவாக இருந்த ஆண்டாள், திடீரென உருவமாக அசைந்து அசைந்து வெளியே வந்து ராமானுஜரைப்பார்த்து "அண்ணா"என்று அழைத்திருக்கிறார்.
1. திருக்குருகைப்பிரான் பிள்ளான்
2. கூரத்தாழ்வான்
3. நடாதூராழ்வான்
4. எங்களாழ்வான்
5. தெற்காழ்வான்
6. இளையாழ்வான்
7. கோமடத்தாழ்வான்
8. சேட்டலூராழ்வான்
9. வேதாந்தியாழ்வான்
10. அனந்தாழ்வான்
11. நடுவிலாழ்வான்
12. மிளகாழ்வான்
13. நெய்யுண்டாழ்வான்
14. உக்கலாழ்வான்
15. திருக்கோவிலூராழ்வான்
16. திருமோகூராழ்வான்
17. கோயிலாழ்வான்
18. அருணபுத்தாழ்வான்
19. கணியனூர் சிறியாழ்வான்
20. திருமலை நல்லான்
21. கிடாம்பியாச்சான்
22. வங்கிபுரத்தாச்சான்
23. ஈச்சம்பாடியாச்சான்
24. கொங்கிலாச்சான்
25. திருக்கண்ணபுரத்தாச்சான்
26. எம்பார்
27. சிறிய கோவிந்தப்பெருமாள்
28. கிடாம்பிப்பெருமாள்
29. அம்மங்கிப்பெருமாள்
30. ஆசூரிப்பெருமாள்
31. பிள்ளையப்பன்
32. பிள்ளை திருமலை நம்பி
33. வங்கிபுரத்து நம்பி
34. சொட்டை நம்பி
35. முடும்பை நம்பி
36. பராங்குச நம்பி
37. திருக்குறுங்குடி நம்பி
38. தொண்டனூர் நம்பி
39. அருணபுரத்து நம்பி
40. மருதூர் நம்பி
41. மழையூர் நம்பி
42. வடுச நம்பி
43. குரவை நம்பி
44. புண்டரீகாட்சர்
45. முதலியாண்டான்
46. கந்தாடையாண்டான்
47. மாருதியாண்டான்
48. மதுரையாண்டான்
49. ஈயுண்ணியாண்டான்
50. சோமாசியாண்டான்
51. சீயராண்டான்
52. ஈச்சாண்டான்
53. பெரியாண்டான்
54. சிறியாண்டான்
55. அம்மங்கியாண்டான்
56. ஆளவந்தாராண்டான்
57. சுந்தரத்தோளுடையான்
58. உக்கலம்மாள்
59. பருத்திக்கொல்லையம்மாள்
60. சொட்டையம்மாள்
61. முடும்பையம்மாள்
62. வைத்தமாநிதியார்
63. பராசரபட்டர்
64. சீராமப்பிள்ளை பட்டார்
65. சிறுபள்ளி தேவராச பட்டர்
66. பிள்ளையுறந்தையுடையார்
67. பிள்ளை திருவாய்மொழியரையர்
68. பிள்ளை திருநறையூரரையர்
69. பிள்ளை ராசமகேந்திரப் பெருமாளரையர்
70. அதிகாரிப்பிள்ளை
71. திருநகரிப்பிள்ளை
72. கோமண்டூர்ப்பிள்ளை
73. அநந்த சோமயாசியார்
74. காஞ்சி சோமயாசியார்
- ஸ்ரீராமானுஜர் ஒருமுறை மதுரகவி ஆழ்வாரின் ஊராகிய திருக்கோளூருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் எதிரே வந்தாள்.
- அந்த சாமான்யப் பெண் சொல்ல சொல்ல ராமானுஜருக்கு கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது.
ஸ்ரீராமானுஜர் ஒருமுறை மதுரகவி ஆழ்வாரின் ஊராகிய திருக்கோளூருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் எதிரே வந்தாள்.
அவள் ஸ்ரீ ராமானுஜரைக் கண்டதும் தண்டனிட்டு நின்றாள்.
"அம்மா, ஆழ்வார் பாசுரத்தில் கூறப்படும் திருக்கோளூர் எங்கே இருக்கிறது? நீ அங்கிருந்துதான் வருகிறாயா?"
"முயல் புழுக்கை வயலிலே கிடந்தென்ன, வரப்பிலே கிடந்தென்ன? ஞானமில்லாத நான் கோளூரில் இருந்தாலென்ன வெளியே இருந்தால் என்ன" என்று கூறிய அவள், ராமானுஜரைப் பார்த்து மிகவும் உணர்ச்சி மயமாகிப் போனவள் போல் பேசினாள்.
"அகம் ஒழித்துவிட்டேனோ விதுரைப்போலே
தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப்போலே
பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப்போலே
அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே
தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாள் போலே
ஆயனை வளர்த்தேனோ யசோதையாள் போலே
அவல் பொரியை ஈந்தேனோ அகஸ்தியரைப்போலே
ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப்போலே
இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார் போலே
வழி அடிமை செய்தேனோ இளையாழ்வார் போலே
அக்கரையில் விட்டேனோ குகப்பெருமாள் போலே
கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப்போலே...
அந்த சாமான்யப் பெண் சொல்ல சொல்ல ராமானுஜருக்கு கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது.






