search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    2023 ரீவைண்ட்: தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
    X

    2023 ரீவைண்ட்: தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

    • முதியோர் ஓய்வூதிய தொகையை மாதம் ரூ.1,000-த்தில் இருந்து, 1,200 ஆக உயர்த்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அரசு அறிவித்தது.
    • நெல்லை- எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ஜனவரி

    ஜன.12: சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம்.

    ஜன.13: அரசு பணியில் சேர தமிழ் கட்டாயம் என்று தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

    ஜன.13: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி ஆதம்பாஷா கைது.

    ஜன.17: பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 5 பேர் பலி.

    ஜன.25: தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை விதித்த அரசின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    பிப்ரவரி

    பிப்.11: தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் பிப்.18-ல் கவர்னராக பதவியேற்றார்.

    பிப்.13: உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்ததால் பரபரப்பு நிலவியது.

    மார்ச்

    மார்ச்.3: விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 100 யூனிட் ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

    மார்ச்.5: கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    மார்ச்.8: திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்ற உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    மார்ச்.17: தமிழக காவல்துறையின் பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு (50 ஆண்டு) கொண்டாட்டம் முதல்- அமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையில் நடந்தது. பெண் போலீசாருக்கு விடுமுறை, விருது, விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

    மார்ச்.22: தமிழக பாம்புபிடி வீரர்கள் உள்பட 54 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    மார்ச்.24: நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என பெயர் சூட்டி, பெயர் பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    ஏப்ரல்

    ஏப்.6: கீழடி உள்ளிட்ட 5 இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ஏப்.14: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தான் கூறியபடி ஏப்.14-ல் தி.மு.க.வினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டு பட்டியலை வெளியிட்டார்.

    ஏப்.16: வீரப்பன் கூட்டாளி, மாதையன் பெங்களூரு ஆஸ்பத்திரியில் இறந்தார்.

    ஏப்.25: குட்கா, புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லும் என்றும், தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடைவிதித்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மே

    மே.18: தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.

    ஜூன்

    ஜூன்.2: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற 9 பேர் குழு அமைக்கப்பட்டது.

    ஜூன்.9: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியை தொடங்கியது இஸ்ரோ.

    ஜூன்.13: மாநில தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டார்.

    ஜூன்.22: முன்னாள் தலைமை செயலாளா் சபாநாயகம் மரணம்.

    ஜூன்.23: சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு.

    ஜூன்.30: தமிழகத்தின் தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவாலும், சென்னையின் புதிய கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோரும் நியமனம்.

    ஜூலை

    ஜூலை.6: தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு. அரசு இடத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை.

    ஜூலை.7: கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

    ஜூலை.16: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு.

    ஜூலை.22: முதியோர் ஓய்வூதிய தொகையை மாதம் ரூ.1,000-த்தில் இருந்து, 1,200 ஆக உயர்த்தி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அரசு அறிவித்தது.

    ஜூலை.26: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் தி.மு.க. ஊழல் பட்டியலை கவர்னரிடம் வழங்கினார். இதில் இருந்து ரூ.5 ஆயிரத்து 600 கோடிக்கான ஊழல் பட்டியல் வெளியானது.

    ஜூலை.27: மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மூங்கில் யானை கூட்ட சிலைகள் வைக்கப்பட்டன.

    ஜூலை.28: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆசிய செஸ் கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டது. அந்த விருதை செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் வந்து மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

    ஆகஸ்டு

    ஆக.5: 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. அவர் முதல் நாளில் முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்டார். 2-ம் நாள் பயணத்தில் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். 3-ம் நாளில் சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயர்சூட்டி கல்வெட்டை திறந்துவைத்தார்.

    ஆக.15: சுதந்திர தின விழாவையொட்டி எவரெஸ்டில் ஏறிய தமிழக பெண்ணான முத்தமிழ் செல்விக்கு கல்பனா சாவ்லா விருது, கீ.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

    ஆக.16: டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் ரூ.50 லட்சத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவரது முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

    ஆக.22: டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

    செப்டம்பர்

    செப்.6: முறைகேடு வழக்கில் விடுதலையான அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    செப் 23: உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    செப் 24: நெல்லை- எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அக்டோபர்

    அக்.5: வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி கவர்னர் மாளிகையில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. அதை கவர்னர் திறந்துவைத்தார்.

    அக்.9: அரியலூர் அருகே விரகாலூர் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் பலி.

    அக்.11: மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக் கும் வரியை உயர்த்தி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

    அக்.14: தி.மு.க. சார்பில் சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

    அக்.14: 40 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியது. 50 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு சென்றது. பிரதமர் மோடி இதை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    அக்.15: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாமிற்கு முழு உருவ சிலை நிறுவப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நவம்பர்

    நவ.3: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. 3-வதுநாள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

    நவ. 7: அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.

    நவ 9: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடையில்லை என்று ஐகோர்ட்டு தீர்ப்பு.

    நவ.16: ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை பெங்களூரு கோர்ட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சமர்ப்பித்தனர். 1380 ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

    நவ.19: தமிழகம் முழுவதும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    நவ.20: பாடகி பி.சுசீலாவுக்கு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

    நவ.22: திருச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற, ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    நவ.23: உங்களைத் தேடி உங்கள் ஊரில் புதிய திட்டம் அறிமுகம். ஒவ்வொரு மாதமும் கிராமங்களில் கலெக்டர்கள் தங்கி மக்கள் குறை கேட்க வேண்டும்.

    நவ.23: தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி (வயது 96) மரணம்.

    டிசம்பர்

    டிச.1: கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அயோத்தி தாசருக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது.

    டிச.5: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு.

    டிச.18: 30 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணும் 'மக்களுடன் முதல்வர்' புதிய திட்டத்தை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×