search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜிப்மர் பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு
    X

    கோப்பு படம்.

    ஜிப்மர் பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு

    • முதலியார்பேட்டையில் நடைபயிற்சி சென்ற ஜிப்மர் பெண் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மைதிலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டையில் நடைபயிற்சி சென்ற ஜிப்மர் பெண் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர்.

    புதுவை முதலி யார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் புவன்கரே வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மைதிலி (வயது47). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் இறந்து விட்டார். தினமும் மைதிலி அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் 8 மணியளவில் நடைபயிற்சி சென்று விட்டு பாரதிதாசன் நகர் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மைதிலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி திருடன் திருடன் என அலறல் சத்தம் போட்டு அவர்களிடமிருந்து போராடினார்.

    ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அந்த வாலிபர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மைதிலி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மைதிலி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×