search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவம் பஞ்சுகளை பறித்து செல்லும் தொழிலாளர்கள்
    X

    மதகடிப்பட்டு பகுதியில் இலவம்பஞ்சுகளை சேகரிக்கும் தொழிலாளர்கள்

    இலவம் பஞ்சுகளை பறித்து செல்லும் தொழிலாளர்கள்

    • வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
    • இலவம் பஞ்சுகளை மரத்தில் இருந்து பறித்து எடுத்துச் செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    தற்போது திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் இலவம்பஞ்சு மரங்களில் இலவம்பஞ்சு காய்ந்து வெடித்து சிதறுகிறது.

    இதனால் பெரும்பாலும் சாலை ஓரங்களில் இலவம்பஞ்சு மரங்கள் அதிக அளவில் இருப்பதால் பஞ்சுகள் வெடித்து வாகன ஓட்டிகளின் கண்களில் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதனை அப்புறப்படுத்தும் விதமாக பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த தலையணை மெத்தை தயாரிக்கும் தொழிலாளர்கள் திருபுவனை சுற்றுவட்டார பகுதிகளில் இலவம் பஞ்சுகளை மரத்தில் இருந்து பறித்து எடுத்துச் செல்கின்றனர்.

    இதனால் பஞ்சுகள் வெடித்து பறக்கும் நிகழ்வு குறையும் மேலும் வாகன ஓட்டிகள் எந்தவித சிரமமின்றி வாகனங்களில் சென்று வரலாம் மேலும் தங்கள் பகுதிகளில் இலவம்பஞ்சு மரங்களால் தொந்தரவு ஏற்பட்டால் இவர்களை தொடர்பு கொண்டால் அதனை முற்றிலுமாக அப்புறப்படுத்தி தருகின்றனர்.

    இலவம் பஞ்சு தேவையான தொகை யையும் மரத்தின் உரிமையாளர்களுக்கு அளிக்கின்றனர்.

    Next Story
    ×