என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள மதுரை அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
புதுச்சேரி:
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். திருபுவனை அருகே கலித்தீர்தாள்குப்பம் வி.கே.நகரை சேர்ந்தவர் மதுரை. தொழிலாளி. இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள மதுரை அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் மதுரை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார்.
இதனை அவரது மனைவி உமாமகேஸ்வரி கண்டித்தார். பின்னர் மதுரை வீட்டிலேயே தூங்கினார். வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுரை அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மாலையில் திருபுவனை சுப்ரீம் நகரில் மதுரை மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடப்பதாக உமாமகஸே்வரிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து உமாமகஸே்வரி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்