என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண்கள் தங்கள் நிலைபாட்டில் தெளிவாக இருக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பெண்கள் தங்கள் நிலைபாட்டில் தெளிவாக இருக்க வேண்டும்

    • முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா பேச்சு
    • வாழ்க்கையில் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் பெண்களுக்கு என தனி சுய சக்தியுடன் செயல்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு கலை கல்லூரியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசியதாவது:-

    பெண்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான தங்களின் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் பெண்களுக்கு என தனி சுய சக்தியுடன் செயல்பட வேண்டும்.

    பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தங்கள் தனி திறமைகளை வளர்க்க வேண்டும்.

    சமூகத்தில் ஒரு பெண் உயர்ந்த இடத்துக்கு வருவது மிக கடினம். ஆனால் வந்த பிறகு எத்தகைய பிரச்சி னைகள் வந்தாலும், தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும். நான் இப்படித்தான் இருப்பேன் என தைரியத்து டன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கல்லூரி முதல்வர் ஆசாத்ராசா, பேராசிரியர் அருளழகன் மற்றும் பேராசி ரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×