என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கி பெண் சாவு
- சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பிப்டிக் தெருவை சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி வசந்தா (வயது62). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே டேவிட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வசந்தாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வசந்தா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து தனிமையில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வசந்தா தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எந்திரத்தின் பெல்டில் வசந்தாவின் சேலை சிக்கி கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா பலத்த காயமடைந்தார்.
உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் வசந்தாவை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகள் ஷகிலா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்