search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    விஷம் குடித்து பெண் தற்கொலை

    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே குடும்பத்தகராறில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வில்லியனூர் அடுத்த அரசூர் குளத்துமேடு வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர்பாபு. இவருடைய மனைவி வனிதா வயது (42). இருவருக்கும் திருமணம் ஆகி யுவஸ்ரீ என்ற மகளும், பரத்வாஜ் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று ரவிசங்கர்பாபு மது அருந்தி விட்டு வனிதாவிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு ஆளான வனிதாவை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர்.

    மேலும் வனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×