என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பெண் விஷம் குடித்து தற்கொலை
- சீட்டு பணத்தை கேட்ட போது மிரட்டியதால்பெ ண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- புவனேஸ்வரியும், சம்பத்தும் சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறார்கள். நீலா தனது இளையமகன் சதீசுடன் காலாப்பட்டில் வசித்து வந்தார்.
புதுச்சேரி:
சீட்டு பணத்தை கேட்ட போது மிரட்டியதால்பெ ண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுவை பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி நீலா (வயது58). இவர்களுக்கு ரமேஷ், வெங்கடேசன், சதீஷ் ஆகிய 3 மகன்களும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
புவனேஸ்வரியும், சம்பத்தும் சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறார்கள். நீலா தனது இளையமகன் சதீசுடன் காலாப்பட்டில் வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீலா பெரிய காலாப்பட்டை சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். தனது பெயரில் 2 சீட்டும், தனது மகள் புவனேஸ்வரி பெயரில் 2 சீட்டு என மாதந்தோறும் பணம் கட்டி வந்தார். ஆனால் ஏலச்சீட்டு முடிந்தும் பாண்டியன் நீலாவுக்கு பணம் தரவில்லை. இதனை அவ்போது நீலா கேட்டு வந்தார். ஆனால் பணம் கொடுக்காமல் பாண்டியன் காலம் தாழ்த்தி வந்தார்.
கடந்த 6-ந் தேதி நீலாவின் 2-வது மகன் ரமேஷ் பாண்டியனிடம் சென்று தனது தாய் மற்றும் சகோதரிக்கு சேரவேண்டிய ஏலச்சீட்டு பணத்தை கொடுக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு பாண்டியன் உனது அம்மாவிடம் நேரில் பேசிக்கொள்கிறேன் என்று கூறி தகாத வார்த்தையால் திட்டினார். பின்னர் ரமேஷ் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனைத்தொடர்ந்து நீலா தனது மகன் சதீஷ் மற்றும் புவனேஸ்வரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது பாண்டியன் 3 பேருடன் அங்கு வந்து நீலாவிடம் பிரச்சினை செய்து பணம் தரமுடியாது. மேலும் உங்களால் எங்களை ஒன்றும் செய்யமுடியாது. மீறி பணம் கேட்டால் குடும்பத்தோடு தீர்த்து கட்டி விடுவோம் என்று மிட்டி விட்டு சென்றனர்.
இதையடுத்து நீலா தனது மகள் புவனேஸ்வரியிடம் சென்று காலாப்பட் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் நீலாவும், புவனேஸ்வரியும் வீடு திரும்பினர்.
ஆனால் வீடு திரும்பிய நீலா தொடர்ந்து சோகமாகவே இருந்து வந்தார். மேலும் பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்ததை எண்ணி நீலா அழுது புலம்பிக்கொண்டிருந்தார். நேற்று மாலை சதீஷ் வெளியே சென்றிருந்தார். அவரது சகோதரி புவனேஸ்வரி குளிக்க சென்ற போது நீலா செடிகள் மற்றும் மாமரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரம் கழித்து புவனேஸ்வரி குளித்து விட்டு வந்து பார்த்த போது தாய் நீலா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவரை ஆட்டோவில் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியலேயே நீலா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நீலாவின் மகன் சதீஷ் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். புகாரில் பாண்டியன் தன்னுடன் 3 பேரை அழைத்து வந்து தனது தாயை மிரட்டியதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்