search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூர் ரவுடிகளின் கூடாரமாக மாறி வருகிறது
    X

    வில்லியனூர் தொகுதியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைக்கு செயலாளர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

    வில்லியனூர் ரவுடிகளின் கூடாரமாக மாறி வருகிறது

    • அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு
    • தி.மு.க. நபர்களின் நட்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை துளைத்து விட்டு குற்றப்பின்னணி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா ளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி இன்று வில்லியனூர் வசந்த நகரில் நடைபெற்றது.

    மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செய லாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார்.

    மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் பிரதீப்குமார், பொதுக் குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில ஜெ. பேரவை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநிலக் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியிலும் கிளை வாரியாக அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.

    மேலும் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இளைஞர் மற்றும் இளம் பெண்களை அ.தி.மு.க.வில் அதிக அளவில் சேர்த்து வருகிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் ஆன்மீக கோவில் நகரம் வில்லிய னூர் என மக்கள் அழைப்பார்கள்.

    இந்த தொகுதியில் பல்வேறு கட்சியின் சார்பில் தேர்ந்தெ டுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஆன்மீக வாதிகளாக இருந்து தொகுதியின் அமைதிக்கு துணையாக செயல்பட்டார்கள்.

    நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் உருளை யன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பலமுறை வெற்றிபெற்ற தி.மு.க.

    எம்.எல்.ஏ. சிவா மக்கள் விரோத செயலால் தான் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என பயந்து சிறுபான்மை வாக்கு களை குறி வைத்து இந்த தொகுதி யில் நின்று வெற்றி பெற்றார்.

    அவர் வெற்றி பெற்ற பிறகு ஏற்கனவே உருளை யன்பேட்டை தொகுதியில் என்னென்ன சட்ட விரோத செயல்கள் நடை பெற்றதோ அவை அனைத்தையும் தற்போது இந்த தொகுதியில் தங்கு தடையின்றி நடை பெற்று வருகிறது.

    கோவில் நகரமான இந்த தொகுதி முழுக்க முழுக்க குற்றவாளிகளின் கூடார மாக மாற்றப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு தி.மு.க. பிரமுகர்களுக்கு விஷ சாராயம் இங்குள்ள திமுக பிரமுகரால் கடத்தப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். போலி மதுபானம் உற்பத்தி, போலி மதுபான கடத்தல், நடமாடும் வேன்கள் மூலம் போலி மதுபானம் உற்பத்தி செய்தல் தினசரி தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்திற்கு கஞ்சா, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கேந்திரமாக இப்பகுதி மாற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. நபர்களின் நட்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை துளைத்து விட்டு குற்றப்பின்னணி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்த தொகுதியை சுற்றிலும் தடை யில்லாமல் அரசியல் பின்புலம் உள்ள வர்களால் மணல் கடத்தல் நடத்தப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவில் இங்குள்ள காவல்துறையினரின் செயல்பாடு உள்ளது.

    இவ்வாறு பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி. திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, முன்னாள் மாநில மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×