என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மாமியாரை கொலை செய்ய முயற்சித்தது ஏன்?
- மருமகள் போலீசில் வாக்குமூலம்
- எனது மாமியார் மேரிடெய்சி வீடு வாங்கி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
புதுச்சேரி:
புதுவை பஸ் நிலையம் எதிரில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாசாமி. இவரின் மனைவி மேரி டெய்சி, (வயது 72). இவரது கணவர் மற்றும் முதல் மகன் இறந்து விட்டனர்.
இளைய மகன் குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார். மேரி டெய்சி தனது வீட்டின் தரை மற்றும் முதல் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். 2-ம் தளத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி இவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மேரி டெய்சியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
படுகாயமடைந்த மேரி டெய்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உருளை யன்பேட்டை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து மூதாட்டியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியின் 2-வது மனைவி குன்னுரை சேர்ந்த ரெபெக்கா (வயது 40), திருநெல்வேலியை சேர்ந்த கூலிபடையினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் மருமகள் ரெபெக்கா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் மேரிடெய்சியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். எனது மாமியார் மேரிடெய்சி வீடு வாங்கி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
இந்நிலையில் என் 2-வது கணவரும் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை எனக்கு தரும்படி பலமுறை கேட்டேன். ஆனால் மேரிடெய்சி தரவில்லை. இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலியை சேர்ந்த கூலி படையினரிடம் உதவி கேட்டேன். அவர்களுக்கு பணம் கொடுத்து மாமியார் கொலை செய்யும்படி கூறினேன்.
எனது மாமியாருக்கு தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் எதிரிகள் இருப்பதால் என் மீது சந்தேகம் வராது என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர் என தெரிவித்தார்.
இதனையடுத்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்