என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    தள்ளுவண்டிகளை எதிர்கட்சி தலைவர் சிவா, கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினர். அருகில் அன்னை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா உள்ளார்.

    ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • அன்னை அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அதன் நிறுவன தலைவர் எஸ்.சிவா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அன்னை அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
    • சொந்தமாக தொழில் செய்யும் உழைப்பாளர் 40-க்கும் மேற்பட்டோருக்கு தள்ளுவண்டி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அன்னை அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அதன் நிறுவன தலைவர் எஸ்.சிவா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அன்னை அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

    பிறந்த நாளையொட்டி சிவா தனது தாய், தந்தையரை வணங்கினார். நகரை தூய்மை செய்யும் துப்புரவு பணியாளருக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார். மதியம் உப்பளம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, காலணிகள் வழங்கினார்.

    இதை தொடர்ந்து மணிகூண்டில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி னார். ஏழை, எளிய குடும்பங்க ளுக்கு தேவையான மளிகை பொருட்களை சுமார் 3000 பேருக்கு வழங்கினார்.

    சொந்தமாக தொழில் செய்யும் உழைப்பாளர் 40-க்கும் மேற்பட்டோருக்கு தள்ளுவண்டி வழங்கினார். பிறந்த நாள் விழா கொண்டாடிய சிவாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், துணை சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், எம்.எல்,ஏ.க்கள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், போலீஸ் உயர்அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தொழிலபதிர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு சமூக அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், இளைஞர்கள், மகளிர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை புதுவை அன்னை அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டிருந்து. மேலும் அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×