என் மலர்
புதுச்சேரி

நலத்திட்ட உதவிகளை அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் வழங்கி காட்சி.
நலத்திட்ட உதவிகள்
- அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளை யொட்டி ஜீவானந்தபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு புதுவை அ,ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் பொதுமக்கள் 150-க்கு மேற்பட்டவர்களுக்கு 3 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளை யொட்டி ஜீவானந்தபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளையொட்டி லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜீவானந்தபுரம் பகுதியில் மகளிர் அணி செயலாளர் காமாட்சி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புதுவை அ,ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் பொதுமக்கள் 150-க்கு மேற்பட்டவர்களுக்கு 3 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப்ரமணியன், மகளிர் அணி இணைச்செயலாளர் லாவண்யா, சிலம்பரசன், ரகுபதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் காண்டீபன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, இலக்கிய அணி பாலு, முன்னாள் இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், மாணவர் அணி ஜெகதீஷ், வர்த்தக அணி கணேசன், தொகுதி செயலாளர்கள் செந்தில், ரத்தினவேல், தனவேலு, தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன், அய்யப்பன், அன்புமணி, லாஸ்பேட்டை தொகுதி இணைச் செயலாளர் பூங்குழலி, குணா, ஜெகதீஷ், புஷ்பவள்ளி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






