search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெங்கடசுப்பாரெட்டியார்- எம்.ஏ.சண்முகம் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
    X

    அரசு சார்பில் வெங்கட சுப்பாரெட்டியார் சிலைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    வெங்கடசுப்பாரெட்டியார்- எம்.ஏ.சண்முகம் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்ப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மறைந்த புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், தியாகியுமான வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி மறை மலை அடிகள் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமி காந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள்

    எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன் ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்ப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எம்.ஏ.சண்முகம் நினைவு தினத்தையொட்டி இன்று மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் எம்.ஏ. சண்முகம் குடும்பத்தினரும் மற்றும் மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×