என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா
    X

    வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்ற காட்சி.

    வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா

    புதுவை மாநிலத்தில் தோன்றி இறை அருளில் இரண்டாக கலந்த நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் தோன்றி இறை அருளில் இரண்டாக கலந்த நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார். இறைவன் அளித்த மாங்கனியால் மன மாற்றம் அடைந்து இறைவனால் ஈர்க்கப்பட்ட இனிய நிகழ்வு மாங்கனி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் மாங்கனி தானம் செய்து அதனை தேராக ஜோடித்து காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு மாங்கனி தேரில் உட்புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

    20-ம் ஆண்டு மாங்கனி திருவிழா சிறுத்தொண்டு நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×