search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிராமப்புற மக்கள் வீடுகளுக்கு நகரமைப்பு குழும அனுமதி-செந்தில்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    கிராமப்புற மக்கள் வீடுகளுக்கு நகரமைப்பு குழும அனுமதி-செந்தில்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • புதுவையின் கிராமப்புற மக்கள் அறியாமையில், புது வை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாமல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
    • புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாத காரணத்தால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் தி.மு.க. செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    புதுவையின் கிராமப்புற மக்கள் அறியாமையில், புது வை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாமல் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    அதே நேரத்தில் தற்பொழுது கிராமப்புற மக்கள் வங்கி கடன் , வீடு கட்டுவதற்கு கடன், மற்றும் அடிப்படை வசதி பெறுவதற்கு புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி பெறாத காரணத்தால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே கடந்த காலங்களில் காலி மனைகளுக்கு 2017-ல் ரெகுலேஷன் போல கிராமப்புறங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒன் டைம் ரெகுலேஷன் கொடுத்து புதுவை நகர அமைப்பு குழுமம் அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×