search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுகாதாரமற்ற குடிநீர் -  அதிகாரியிடம்  கென்னடி எம்.எல்.ஏ. புகார்
    X

    அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. முறையிட்ட காட்சி.

    சுகாதாரமற்ற குடிநீர் - அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. புகார்

    • உப்பளம் தொகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வந்தது.
    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தத்தை சந்தித்து முறையிட்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வந்தது. இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தத்தை சந்தித்து முறையிட்டார். அவர் உதவி பொறியாளர் வெங்கடேசனை அழைத்து உடனே சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தினார்.

    மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதாகவும் அதனை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×