search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுமக்களுக்கு சத்திய சோதனை புத்தகம்
    X

    பொதுமக்களுக்கு புத்தகம் வினியோகம் வழங்கிய காட்சி.

    பொதுமக்களுக்கு சத்திய சோதனை புத்தகம்

    • புதுவை வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த சத்திய சோதனை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே வாசகர் வட்டம் சார்பில் சத்திய சோதனை புத்தகம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த சத்திய சோதனை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    அதன்படி காந்திஜெயந்தியை முன்னிட்டு புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே வாசகர் வட்டம் சார்பில் சத்திய சோதனை புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத்குமார் பொதுமக்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    முன்னதாக இலக்கியசோலை தமிழ் மன்ற தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் ஜெகதீசன், முருகையன், கோபாலகிருஷ்ணன், ராஜா, மதுரை முத்து, சவுந்திரவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×