என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பெரியமார்க்கெட் கட்டுமான பணிக்கு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வேண்டுகோள்
- காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது இதை எதிர்காமல் தற்போது ஆட்சியின் போது எதிர்த்து மலிவு அரசியல் செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள பெரிய மார்க்கெட் கட்டிடங்கள் 200 ஆண்டுகள் பழமையானதாகும். மார்க்கெட்டை நவீனம யமாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 55 கோடி ஒதுக்கினார்.
அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது இதை எதிர்காமல் தற்போது ஆட்சியின் போது எதிர்த்து மலிவு அரசியல் செய்கின்றனர். இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே வியாபாரிகள் எதிர்கட்சிகளின் தூண்டுதலுக்கு செவிசாய்க்காமல் பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும்.
மார்க்கெட் பகுதி தற்போது சுகாதாரமற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே 2 முறை தீ விபத்துக்குள்ளா கியுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஈரடுக்கு வாகன நிறுத்துமிடம், சுகாதார வசதியுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய கட்டுமானங்கள் அமைக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்