search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாய உழவு பணிக்கு டிராக்டர்-செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்
    X

    விவசாய உழவு பணிக்கு டிராக்டரை செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கிய காட்சி.

    விவசாய உழவு பணிக்கு டிராக்டர்-செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்

    • டிராக்டர் பழுதடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • விவசாய உழவு பணிக்கான டிராக்டர் மற்றும் ரோட்டாவேட்டர் வாங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, விவசாய உழவு பணிக்கான டிராக்டரை செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

    பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் மூலம் விவசாய உழவு பணிக்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் வாங்கப்பட்டது. அந்த டிராக்டர் பழுதடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்பகுதி விவசாயிகள் புதிதாக டிராக்டர் வாங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியின் பெயரில், மூன்று பேர் கொண்ட ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டு புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி நிதி உதவி மூலமாக 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக விவசாய உழவு பணிக்கான டிராக்டர் மற்றும் ரோட்டாவேட்டர் வாங்கப்பட்டது.

    இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று பாகூரில் நடைபெற்றது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் மதி ( எ) பொன்னம்பலம், குமாரக்கிருஷ்ணன், ஹரிலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், பாகூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×