என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
நலத்திட்ட பணிகளில் தொய்வு-நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
- புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகு திக்குட்பட்ட சின்ன வாய்க்கால் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாய்க்கால் மேம்படுத்தும் பணி, புதிய மின் கேபிள்கள், புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி, புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணி, புதிய கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மிக மெதுவாக பணிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து தொகுதி எம்எல்ஏ நேரு இன்று அப்பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பணிகள் ஏன் மிகவும் காலதாமதமாக நடக்கிறது என அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தார்.
ஆய்வின்போது பொதுப்ப ணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் சம்மந்தம், பொது சுகாதார குடிநீர் பிரிவு உதவி பொறியாளர் வாசு, கழிவுநீர் உட்பட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், மின்துறை உதவி பொறியாளர் கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்