என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
மனைவிக்கு கொலை மிரட்டல்
- வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
- பிரகாஷ் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். பிரகாஷ் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இதற்கிடையே பிரகாஷ் சென்னையை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த புவனேஸ்வரி கண்டித்த போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஒரே வீட்டில் புவனேஸ்வரி தனது குழந்தைகளுடனும் மற்றொரு பகுதியில் பிரகாசும் தனித்தனியே வசித்து வந்தனர். ஒவ்வொரு மாதமும் குடும்ப செலவுக்கு புவனேஸ்வரிக்கு பிரகாஷ் ரூ.10ஆயிரம் கொடுத்து வந்தர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூர் நாவிதர் மடத்துவீதியில் வசித்து வந்த பிரகாசின் தந்தை இறந்து போனார்.
இதையடுத்து புவனேஸ்வரி சம்பவத்தன்று 7-ம் நாள் துக்கம் படைக்க மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறிய நிலையில் புவனேஸ்வரி தனது கணவருக்கும் உணவு பரிமாறினார். இதனால் ஆவேசமடைந்த பிரகாஷ் புவனேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி நீயாரடி எனக்கு உணவு பரிமாற என கூறி கையால் சரமாரியாக தாக்கினார். மேலும் புவனேஸ்வரியின் கைவிரலை கடித்து அவரை மாடியில் இருந்து கீழே தள்ள முயன்றார். உடனே அங்கிருந்த உறவினர்கள் புவனேஸ்வரியை பாது காப்பாக பிடித்து கொண்டனர்.
தொடர்ந்து புவனேஸ்வ ரியை விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவேன் என்றும் சாப்பாட்டு அரிசியில் வெந்தைய அளவு விஷமாத்திரைகளை கலந்து கொன்று விடுவேன் என்றும் பிரகாஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து புவனே ஸ்வரி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.






