என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளியில் பொருட்கள் திருட்டு
    X

    கோப்பு படம்

    அரசு பள்ளியில் பொருட்கள் திருட்டு

    • தலைமை ஆசிரியர் அறை ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கம்ப்யூட்டர் மற்றும் பாட புத்தகங்களை திருடி சென்றுள்ளனர்
    • நெட்டப்பாக்கம் கம்பத்தம் வீதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கம்ப்யூட்டர் மற்றும் பாட புத்தகங்களை திருடி சென்றுள்ளனர்.

    நெட்டப்பாக்கம் கம்பத்தம் வீதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ரகுமான்கான் உள்ளார். 2 மாடி கட்டிடம் கொண்ட இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கம்ப்யூட்டர் சாதனங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் அறையில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் முன்புற வாயில் கதவும் பூட்டப்பட்டது. வழக்கம் போல் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுமான்கான் தனது அறை கதவை திறக்க வந்தார். அப்போது அங்கு ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் சாதனங்கள், பள்ளி பாடப்புத்தகங்கள் திருடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ரகுமான்கான் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×