என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மோதலில் காயமடைந்த வாலிபர் சாவு
- பூமியான்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த வாலிபர் இறந்து போனார்.
- முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
பூமியான்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த வாலிபர் இறந்து போனார்.
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது27). பெயிண்டர். இவருக்கும் பூமியான்பேட்டை பாவணன்நகரை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி இரு தரப்பினரும் பிரச்சினை செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முருகன் போன் செய்து பாலாஜியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு பாலாஜி பதில் அளிக்கும் வகையில் முருகனின் மனைவியை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
அப்போது முருகன் தைரியம் இருந்தால் நான் இருக்கும் இடத்துக்கு வா என்று அழைத்தார். அதற்கு சவால் விடுக்கும் வகையில் பாலாஜி நான் வந்தால் என்ன செய்ய முடியும்? சற்று நேரத்தில் நீ இருக்கும் இடத்தில் வருகிறேன் என்று கூறி தனது நண்பர்களான வேலா, சண்முகம் உள்பட 6 பேருடன் பூமியான் பேட்டைக்கு சென்றார்.
அப்போது தயாராக இருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான அப்பாஸ், கார்த்திக், ஐஸ் சதீஸ், குரு, சுந்தர் ஆகியோர் பாலாஜியையும், அவரது தரப்பை சேர்ந்தவர்களையும் இரும்பு பைப், பீர் பாட்டில் , தடி மற்றும் கல்லால் தாக்கினர். இதனை எதிர்பார்க்காத பாலாஜி தரப்பினர் பயந்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஓட ஓட விரட்டி பாலாஜி தரப்பினரை சரமாரியாக தாக்கினர். இதில் பாலாஜி, வேலா, சண்முகம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்
இதில் வேலா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி தரப்பினரை தாக்கிய முருகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேலா
சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து ரெட்டியார்பாளையம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்