என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
- திருமணமான பெண்ணுடன் போட்டோ எடுத்து ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர் அருகில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த திருமணமான 34 வயதுள்ள பெண்ணுடன் பழகி வந்தார்.
புதுச்சேரி:
திருமணமான பெண்ணுடன் போட்டோ எடுத்து ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம் அருகே ராமரெட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் என்ற விக்கி. இவர் அருகில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த திருமணமான 34 வயதுள்ள பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் கல்லூரியிலும், மற்றொரு மகன் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகிறார்கள்.
நண்பர் முறையில் பழகி வந்த அந்த பெண்ணிடம் அரவிந்தன் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் அந்த பெண் தனக்கு கணவர் மற்றும் 2 மகன்கள் இருப்பதால் பிரச்சினை ஆகிவிடும் என்று காதலிக்க மறுத்து வந்தார். ஆனால் அரவிந்தன் காதலிக்காவிட்டால் செல்போனில் மட்டும் பேசி பழகி வரலாம் என கூறி அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை வாங்கி அடிக்கடி பேசி வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன்கள் இல்லாத நேரத்தில் அரவிந்தன் அங்கு சென்றார். அப்போது போட்டோ எடுத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து அரவிந்தன் வற்புறுத்தியதால் அந்த பெண் அரவிந்தனுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டார்.
அதுமுதல் அரவிந்தன் செல்போனில் பேசி தன்னுடன் ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லை யென்றால் தன்னுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை உனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த அரவிந்தன் என்ன புதிய சேலை கட்டிக்கொண்டு மினுமினுக்கிறாய்? என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து போட்டு கழுத்திலும், முதுகிலும் தாக்கியதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அந்த பெண் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






