search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கரும்பு அறுவடை செய்ய சர்க்கரை ஆலைக்கு உத்தரவிட வேண்டும்
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் விவசாயிகள் மனு அளித்த காட்சி.

    கரும்பு அறுவடை செய்ய சர்க்கரை ஆலைக்கு உத்தரவிட வேண்டும்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை
    • பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    புதுச்சேரி:

    ஈ.ஐ.டி. பாரி அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கி ணைப்பு குழுவினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் 2022-23-ம் ஆண்டு கடுமையான வெப்பத் தாக்கத்தினால் கரும்பு பயிர்களில் புதிய நோய்கள் உருவாகி முழுவதும் வேரிலிருந்து காய்ந்து அழிந்து வருகிறது. இந்த பாதிப்பை நோய் மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தும் கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இதனால் கரும்பு விவசாயிகளுக்கு கடுமையான விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகளுக்கு இலவசமாக கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளது.

    எனவே விவசாயத்துறை வல்லுநர்களும், காப்பீடு நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து கரும்பு பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு வழங்கி கரும்பு விவசாயிகளை காத்திட வேண்டும்.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழக பகுதியில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுபோல புதுவை கரும்பு ஆணையர் புதுவையில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய சர்க்கரை ஆலைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

    Next Story
    ×