என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் அமைச்சருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து  சபாநாயகர் விசாரிக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பெண் அமைச்சருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து சபாநாயகர் விசாரிக்க வேண்டும்

    • சமூக அமைப்புகள் கோரிக்கை
    • அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் எழிலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜெயக்குமார், திராவிடர் கழகம் அன்பரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ, மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் ,பி போல்ட் பஷீர் அகமது, பெரியார் சிந்தனை இயக்கம் தீனா, இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன், தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், இந்திய புரட்சியாளர் இயக்கம் டேவிட், முற்போக்கு மாணவர் கழகம் தமிழ்வாணன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் எழிலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் பேசிய சமூக அமைப்பினர், ஜனநாயக முறையில் சபாநாயகர் செயல்பட்டால் எம்.எல்.ஏ. என்ற முறையில் சந்திர பிரியங்காவுக்கு ஏற்றப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    ஜாதி ரீதியாகவும் பாலின ரீதியாக அவர் கொடுமை செய்யப்பட்டது குறித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு சபா நாயகர் உத்தரவிட வேண் டும் என வலியுறுத்தினர்.

    Next Story
    ×