என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வானொலி நிலையத்தில் பொழுதுபோக்கு அலைவரிசை நிறுத்தத்தை கைவிட வேண்டும்
- சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
- இது மக்களுக்கு செய்திகள் மற்றும் பல்வேறு வகைகளில் புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காக அகில இந்திய வானொலி நிலையம் 1967-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
இந்த நிலையத்தின் முதன்மை அலைவரிசை புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. இதன் மூலம் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரெயின்போ பண்பலை அலைவரிசை தொடங்கப்பட்டது. இது மக்களுக்கு செய்திகள் மற்றும் பல்வேறு வகைகளில் புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
இதனை லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கேட்டு பயன்பெற்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அகில இந்திய வானொலி நிலையங்களில் உள்ள நூற்றுக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. மேலும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தாற்காலிக பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்த அரசு நிறுவனத்துக்கு நிதி மற்றும் உரிய வசதிகள் குறைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் பொழுபோக்கு அலை வரிசையான ரெயின்போ பண்பலையில் அவை நிறுத்தப்பட்டு, தகவல் அலைவரிசையான முதன்மை அலைவரிசை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகிறது.
இந்த நிலை நாடெங்கும் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி இழப்பர். மேலும் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது . இது மக்கள் விரோத நடவடிக்கையாகும். எனவே இந்த புதிய நடமுறையை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






