search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
    X

    கோப்பு படம்.

    அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

    • அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
    • . அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் சீரான மின்சாரம் வழங்கப்படாததால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று வருவாய்த்துறை, மின்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடந்த கூட்டத்தில், கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆணையர் புகேந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது பேசிய பொதுமக்கள் கோட்டகுப்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்ப ட்டுள்ளனர் என்றனர்.

    இதையடுத்து நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி பேசும் போது, கோட்டக்குப்பம் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் துணை மின் நிலையம் அமைக்க சின்னக்கோ ட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான 1 3/4 ஏக்கர் நிலம் ஆரோவில் நிர்வாகம் அனுமதியோடு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் வருவாய் துறையினர் துணையோடு இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று கூறினார். அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பாதியி லேயே எழுந்து சென்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×