என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
- அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
- . அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் சீரான மின்சாரம் வழங்கப்படாததால் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையால் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று வருவாய்த்துறை, மின்துறை, நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடந்த கூட்டத்தில், கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆணையர் புகேந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பேசிய பொதுமக்கள் கோட்டகுப்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்ப ட்டுள்ளனர் என்றனர்.
இதையடுத்து நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி பேசும் போது, கோட்டக்குப்பம் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் துணை மின் நிலையம் அமைக்க சின்னக்கோ ட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான 1 3/4 ஏக்கர் நிலம் ஆரோவில் நிர்வாகம் அனுமதியோடு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் வருவாய் துறையினர் துணையோடு இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று கூறினார். அப்போது ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பாதியி லேயே எழுந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்