என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பங்குனி உத்திரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தங்கமயில் வாகன உற்சவமும் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளிக் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.
புதுச்சேரி:
மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலைய சுவாமிகள் திருமடத்தின் கீழ் உள்ள பிரசித்தி பெற்ற மயிலம் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர பெருவிழா பங்குனி திங்கள் 13-ம் நாள் ஆதீனகர்த்தர் 20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள்முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தங்கமயில் வாகன உற்சவமும் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளிக் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.
மறுநாள் 4-ந் தேதி பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருத்தேர் வீதி உலா படம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
5-ம் தேதி காலை பங்குனி உத்திர தீர்த்தவாரியும், இரவு தெப்ப உற்சவமும் 6-ந் தேதி இரவு முத்து பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர நிகழ்ச்சி அனைத்தும் பொம்மபுர ஆதீனம் மடம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்