search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பங்குனி உத்திரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை சன்னிதானம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலைய சுவாமிகள் முன்னிலையில் நடந்த காட்சி.

    பங்குனி உத்திரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தங்கமயில் வாகன உற்சவமும் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளிக் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலைய சுவாமிகள் திருமடத்தின் கீழ் உள்ள பிரசித்தி பெற்ற மயிலம் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர பெருவிழா பங்குனி திங்கள் 13-ம் நாள் ஆதீனகர்த்தர் 20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள்முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தங்கமயில் வாகன உற்சவமும் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ந் தேதி இரவு திருக்கல்யாணம் வெள்ளிக் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

    மறுநாள் 4-ந் தேதி பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருத்தேர் வீதி உலா படம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    5-ம் தேதி காலை பங்குனி உத்திர தீர்த்தவாரியும், இரவு தெப்ப உற்சவமும் 6-ந் தேதி இரவு முத்து பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர நிகழ்ச்சி அனைத்தும் பொம்மபுர ஆதீனம் மடம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×