என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தமிழக கல்வி கொள்கையையே புதுவை அரசும் பின்பற்ற வேண்டும் சிவா எம்.எல்.ஏ வலியுறுத்தல்
- புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
- மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு நாடு முழுக்க தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம், இந்தியை கொண்டு வரும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வடிவமை த்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு நாடு முழுக்க தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம், இந்தியை கொண்டு வரும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வடிவமை த்துள்ளது. 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழி கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கல்வித்திட்டத்தை முன்னிறுத்துகிறது.
தாய்மொழியில் 5 அல்லது 8-ம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தான் 5-ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு அப்பாட திட்டங்களை தமிழில் தயாரித்து வழங்கவில்லை.
இதே நிலைதான் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினாலும் தொட ரும். ஆட்சியாளர்களாலும் பாடத் திட்டங்களை தமிழில் தயாரித்து வழங்க முடியாது. 6-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத் தினால் மொழிப்பாடமாக உள்ள தமிழ் நீக்கப்பட்டு, இந்தி நுழைந்துவிடும்.
இதனால் புதுவை அரசு தமிழக பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். தமிழ் மொழியில் பாடத்திட்டத்தை புதுவை அரசால் தயாரிக்க முடியாது என்பதால் வெளிமாநிலங்களில் எந்த மொழியில் தயாரிக்கப்படு கிறதோ, அந்த புத்தகங்களை பெற்று வந்து புதுவை மாணவர்களுக்கு வழங்கும்.
எனவே புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தினால் இந்தி அல்லது பிற மொழிகளை திணிப்பதற்கான பாதை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை உணர்ந்து தமிழக முதல்-அமைச்சர், தனியாக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறார்.
நிச்சயம் அது சிறந்த கல்விக் கொள்கையாகவும், மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றி அமைக்கும் கொள்கையாகவும் இருக்கும். எனவே தமிழக கல்விக் கொள்கையை புதுவையிலும் 1-ம் வகுப்பு முதலே அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






