search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடுதேடி வரும்  வியாபாரிகளை அரசு பாதுகாக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    வீடுதேடி வரும் வியாபாரிகளை அரசு பாதுகாக்க வேண்டும்

    • மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியா வசிய பொருட்களான, உப்பு, புளி, பருப்பு, கொ.மல்லி, மிளகாய், பூண்டு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்களையும், வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளையும், எண்ணெய் வகைகளையும் தங்களது வீட்டில் இருந்தபடியே, விலை குறைவாக 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் விற்பனை செய்கின்றனர்.

    இந்த சிறு வியாபாரி களை, மக்கள் நலன் கருதி புதுவை அரசு ஊக்குவிக்க வேண்டும். இது கிராம மக்களுக்க உதவிகரமாக உள்ளது. வீடுதேடி வரும் வியாபாரிகளை தடை செய்யக்கூடாது. வீடு தேடி வழங்கி வரும் சிறு வணிகர்களை பாதுகாக்க புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×