என் மலர்
புதுச்சேரி

சிவகணபதி
தவறி விழுந்த தொழிலாளி பலி
- கட்டிட வேலை செய்த போது தொழிலாளி தவறி விழுந்து பலியானர்.
- பண்ருட்டி அடுத்த சித்திரை சாவடியை சேர்ந்தவர் சிவ கணபதி (32) கட்டிடதொழிலாளி. இவர் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர்.
புதுச்சேரி:
கட்டிட வேலை செய்த போது தொழிலாளி தவறி விழுந்து பலியானர்.
பண்ருட்டி அடுத்த சித்திரை சாவடியை சேர்ந்தவர் சிவ கணபதி (32) கட்டிடதொழிலாளி. இவர் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இவர் புதுவை முத்தையால்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில்கட்டிட வேலைசெய்துவந்தார்.
கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் மேல்குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணி ஈடுபட்டிருந்தார்.
அப்போது தவறி விழுந்தார் இதனால் படுகாயம் அடைந்த அவரை
புதுவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவகணபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து முத்தியால் பேட்டைபோலீசில் புகார்செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






