search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய மார்க்கெட் கட்டுமான பணியை உடனடியாக தொடங்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    புதிய மார்க்கெட் கட்டுமான பணியை உடனடியாக தொடங்க வேண்டும்

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • காய்கறி மார்க்கெட், பூக்கடை, மளிகை கடைக்கு தனிதனி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களின் நலனுக்காக சுமார் ரூ.36 கோடியில் மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணியை அரசு முன்னெடுக்கும் போது வியாபாரிகள், வியாபாரிகள் போர்வையில் உள்ள குத்தகை தாரர்களும் மார்க்கெட்டை கட்ட விடாமல் தடுப்பது தவறானது.

    மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மார்க்கெட்டை முழுமையாக இடித்து நவீன முறையுடன் கீழ் பகுதி முழுவதும் பார்க்கிங் வசதியும், சிறுகடைகளும் உள்ளடக்கி 2 அடுக்கு மார்க்கெட் கட்ட வேண்டும்.

    கலெக்டர் 8 மாதத்திற்குள் கடையை கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறுவது அரசை வியாபாரிகள் மிரட்டுவதாக தெரிகிறது. இதே நிலை நீடித்தால் எந்த திட்டத்தையும் எந்த அரசாலும் செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அங்கு தற்போது வியாபாரம் செய்யும் கடைகளின் விபரங்களை யும், மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யும் கடைகள், நடைபாதை வியாபாரிகள் விபரங்களை யும் அரசு உடனடியாக கணக் கெடுக்க வேண்டும். ஒரு தேதியை நிர்ணயம் செய்து கடைகளில் இருக்கிற பொரு ட்களை அப்புறப்ப டுத்தி மார்க்கெட் கட்டும் பணி அரசு தொடங்க வேண்டும்.

    மாற்றுஇடமாக ரோடியர் மைதானம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள இடம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. எதிரில் உள்ள நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே காய்கறி மார்க்கெட், பூக்கடை, மளிகை கடைக்கு தனிதனி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    அம்பேத்கர் சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில காலியாக உள்ள துறைமுகம் மைதானத்தில் அங்குள்ள கடைக்கு மாற்று இடமும் அமைக்கலாம். காலம் மாற்றத்திற்கு ஏற்ப மக்களுடைய நலனுக்காக செயல்படுத்த கூடிய திட்டங்களுக்கு வியாபாரிகள் தடங்கள் ஏற்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    புதிதாக மார்க்கெட் கட்டும் பணியில் எவ்வித சமர சத்துக்கும் இடமளிக்காமல் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

    Next Story
    ×