என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஐஸ் கிரீமில் எலி மருந்து கலந்து தின்று வாலிபர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    ஐஸ் கிரீமில் எலி மருந்து கலந்து தின்று வாலிபர் தற்கொலை

    • கோர்ட்டு சம்மன் அனுப்பிய தால் விரக்தியில் ஐஸ் கிரீமில் எலி மருந்து கலந்து தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கேண்டினில் வேலை செய்து வருகிறார்

    புதுச்சேரி:

    கோர்ட்டு சம்மன் அனுப்பிய தால் விரக்தியில் ஐஸ் கிரீமில் எலி மருந்து கலந்து தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் சுப்பு லட்சுமி நகரை சேர்ந்தவர் பாபு. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி. இவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கேண்டினில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் விஷ்ணு குமார்(வயது18).

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடப்பாக்கம் - பத்துகண்ணு ரோட்டில் விஷ்ணுகுமார் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் ஆஜராக கோர்ட்டில் இருந்து விஷ்ணுகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனால் விஷ்ணுகுமார் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விஷ்ணுகுமார் ஐஸ்கிரீமில் எலிமருந்து கலந்து சாப்பிட்டு விட்டார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷ்ணுகுமாரை அவரது பெற்றோர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஷ்ணுகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை பாபு கொடுத்த புகாரின் பேரில் வில்லிய னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×