என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை பேராசிரியருக்கு ஆசிரியர் செம்மல் விருது
    X

    பேராசிரியருக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்ட காட்சி.

    புதுவை பேராசிரியருக்கு ஆசிரியர் செம்மல் விருது

    • சென்னையில் உள்ள தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்க–ளுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்படுகிறது.
    • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் விருது வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    சென்னையில் உள்ள தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்க–ளுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில் புதுவை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பாரிவள்ள–லுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் விருது வழங்கி பாராட்டினார். பேராசியர் பாரிவள்ளல், கடந்த 30 ஆண்டுகளாக கல்விப் பணியில் உள்ளார். 25-க்கும் மேற்பட்ட கருத்தர ங்குகளில் ஆய்வுரை சமர்பித்துள்ளார். அவரது கல்வி சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×