search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுவைக்கு 28-ந்தேதி துணை ஜனாதிபதி வருகை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுவைக்கு 28-ந்தேதி துணை ஜனாதிபதி வருகை

    • புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28-ந்தே தி நடக்கிறது.
    • விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. டாக்டர் அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் உள்ள ஜவகர்லால் நேரு அரங்கில் இந்த பட்டமளிப்பு விழா நடக்கிறது.

    விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பட்டங்களை வழங்குகிறார்.

    விழாவில் 21 ஆயிரத்து 208 புதுவை பல்கலைக்கழக மற்றும் இணைப்பு கல்லூரி மாணவர்கள், 10 ஆயிரத்து 649 தொலை தூர கல்வி மாணவர்கள் என 31 ஆயிரத்து 857 மாணவர்கள் பட்டங்களை பெறுகிறார்கள்.

    இதில் 242 ஆராய்ச்சி மாணவர்களும் பல்வேறு பட்டப்பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்கள் பெற உள்ள 187 மாணவர்களும் அடங்குவார்கள்.

    பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது. துணை ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதல்முறையாக ஜெகதீப்தன்கர் புதுவை வருவதையொட்டி அரசு சார்பிலான நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×