search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல்
    X

    புதுவையில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல்

    • புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக காய்ச்சலால் அவதிப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் 2 குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் சுகாதாரத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    Next Story
    ×