search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    புதிதாக அமைக்கப்பட்ட 27 அடி உயர சுந்தர விநாயகர் சிலை.

    சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    • மயிலம் பொம்மபுர ஆதீனம் பங்கேற்பு
    • தனபூஜை கன்னி யாஸ்திரிபூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மொரட்டாண்டி கிராமத்தில் தொல்லைகாது சித்தர் வழிபட்டு ஞானம் பெற்ற சுந்தர விநாயகர் கோயிலில் புதியதாக 27 அடி உயரத்தில் சுந்தர விநாயகர் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு மற்றும் துலுக்கானத்தம்மன் கோயில் பூர்ண புஷ்கலா சமேத அண்ணமார் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

    காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுந்தர விநாயகர் கோயில் கும்பாபி ஷேகம் 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் துலுக்கா னத்தம்மன் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூரண புஷ்கலா சமேத அண்ணமார் கோயில் கும்பாபிஷேகமும் நடை பெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி முன்தினம் 29-ம் தேதி தேவதா அனுஞ்யை, எஜமான அனுஞ்யை, கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், மகாலட்சுமி கோமத்துடன் பூஜை தொடங்கியது. நேற்று கோ பூஜையுடன் தொடங்கிய கும்பாபி ஷேகம் ரிஷப பூஜை அஸ்வபூஜை, கஜ பூஜை, தனபூஜை கன்னி யாஸ்திரிபூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை நடந்தது.

    பின்னர் மொரட்டாண்டி ஆண்டி குளத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. யாகசாலை பிரவேசம் அங்குரார்ப னம், பிரவேசம் ரக்க்ஷாபந்தனம், கும்பஅலங்கா ரம் முதல் கால யாக வேள்வி ஆகியவை நடந்தது. 7 மணிக்கு மங்கள இசையுடன் விசேஷ சந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    காலை 11 மணிக்கு புதிய சிலைகளுக்கு அஷ்டதச கிரியை கண் திறப்பு மற்றும் புதிய சிலைகள் கோபுர கலசம் கரிக்கோலம் வருதல் நிகழ்ச்சி மற்றும் 2-ம் கால யாக கேள்வி நடந்தது. தொடர்ந்து மங்கள இசை உடன் விசேஷ சந்தி பூதசுத்தி அந்தர் யாகம் யாகசாலை பிரவேசம் சூரிய பூஜை சந்திர பூஜை பேரிக அர்ச்சனை நவசக்தி அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை காலை 5.30 மணிக்கு யாக சாலை பிரவேசம் சூரிய பூஜை சந்திரபோஸ் உடன் கலசம் புறப்பாடு நடந்து மயிலம் பொம்மபுர ஆதீனம் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய திருக்கோயில் இருபதாம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபி ஷேகமும் 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் துலுக்கானத்தம்மன் பரிவார தெய்வங்களுக்கு மற்றும் பூரண புஷ்கல சமேத அண்ணா கோயில் குடமுழுக்கு நன்னீராட்டும் நடைபெறுகிறது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் மொரட்டாண்டி சனி பகவான் கோயில் நிறுவனர் டாக்டர் சிவஸ்ரீ சிதம்பர சீதாராம குருக்கள், புது க்கோட்டை புவனேஸ்வரி அவதூத்த வித்யா பீடம் பூஜ்ஜியஸ்ரீ பிரணவாந்த சுவாமிகள், திருப்பூர் பல்லடம் பிரத்தகிரி சுவாமி கள் பிரம்மஸ்ரீ சாம்ப சிவரிஷீஸ்வர், பாதாள பிரதயாங்கர்கர கோயில் மடாதிபதி பிரம்மஸ்ரீ நடாத்தூர் ஜனார்த்தன சுவாமிகள், அங்காள பரமேஸ்வரி கோயில் பிரம்மஸ்ரீ பத்மநாப சாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்று கும்பாபிஷே கத்தை நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாட்டினை மொரட்டாண்டி கிராம நாட்டா ண்மைகள், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மகளிர்கள் செய்துள்ளனர். கும்பாபிஷேக விழாவை யொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் விசேஷ வானவே டிக்கையும் நடைபெறுகிறது.

    Next Story
    ×