search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய சதுரங்க போட்டியில் மாணவன் மாதேஷ்குமார் முதலிடம்
    X

    முதலிடம் மாணவன் மாதேஷ் குமாருக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

    தேசிய சதுரங்க போட்டியில் மாணவன் மாதேஷ்குமார் முதலிடம்

    • ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது. போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர்.
    • இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.

    புதுச்சேரி:

    ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது.

    போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி 7 ,9 ,11 ,13, மேற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தது.

    போட்டியில் 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புதுவை மாணவர் மாதேஷ் குமார் 9-க்கு 8 புள்ளிகள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

    இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.

    Next Story
    ×