search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திலாசுப்பேட்டை, கோரிமேடு பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    கோப்பு படம்.

    திலாசுப்பேட்டை, கோரிமேடு பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி ஆனந்தா நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே , காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    இதே போல் கோரிமேடு அரசு மருந்தகம் உட்புறம் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று கால ை 10 மணி முதல் மால ை 5.30 மணி வரை போலீஸ் குடியிருப்பு, சிவாஜி நகர், இந்திராநகர் விரிவு, இலுப்பை தோப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×