என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில ஹேண்ட்பால் போட்டி
    X

    புதுவை ஹேண்ட்பால் சங்க செயலாளர் நாராயணசாமி போட்டியை தொடங்கி வைத்த காட்சி.

    மாநில ஹேண்ட்பால் போட்டி

    • புதுவை மாநில ஹேண்ட்பால் அசோசி யேஷன் செயலாளர் நாராயணசாமி, உழவர் கரை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சசிகுமார் தலைமை வகித்தனர்.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டான் போஸ்கோ பள்ளி முதல்வர் ஜாபர்சன் சுரேஷ், எஸ்.பி. ரவிக்குமார், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கீத்தல் சத்யநாராயணன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹேண்ட்பால் விளையாட்டு போட்டிகள் உழவர்கரை கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    புதுவை மாநில ஹேண்ட்பால் அசோசி யேஷன் செயலாளர் நாராயணசாமி, உழவர் கரை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சசிகுமார் தலைமை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை பாத்திமா மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல், புதுவை ஹேண்ட்பால் சங்க செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வில்லியனூர் அணியும், 2-ம் இடத்தைப் காரைக்கால் அணியும், 3-ம் இடத்தை உழவர்கரை அணியும் கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை வில்லியனூர் அணியும், 2-ம் இடத்தை புதுவை அணியும், 3-ம் இடத்தை உழவர்கரை மாவட்ட அணியும் கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டான் போஸ்கோ பள்ளி முதல்வர் ஜாபர்சன் சுரேஷ், எஸ்.பி. ரவிக்குமார், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கீத்தல் சத்யநாராயணன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் டாக்டர் இளங்கோவன், பாண்லே உதவி மேலாளர் குமார், உழவர்கரை மாவட்ட ஹேண்ட்பால் பொதுசெயலாளர்கள் அருள், வீரன், பொருளாளர் ஏகாம்பரம், பொறுப்பா ளர்கள்

    பொண்ணி யம்மாள்,வித்தியா, ஐயனா ரப்பன், கிருஷ்ணா, மணிமாறன், சித்திரவேலு, ராஜாராம், முனியன்,விசு, பிரசன்னா, இளவேந்தன், மனோபாலன் , கரண்,பரணி, அருள்,விஜய் உட்பட பலர்கலந்துகொண்டனர். பொறுப்பாளர்கள் அருள், ஏகாம்பரம் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×