என் மலர்
புதுச்சேரி

பெயர் பலகையை சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.
விற்பனைக்குழு தொழிலாளர் முன்னேற்றசங்கம் தொடக்கம்
- தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க தொடக்க விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது.
- தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை விற்பனைக் குழு தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க தொடக்க விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது.
விற்பனைக் குழு ஊழியர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சி தலைவரான சிவா எம்.எல்.ஏ. விற்பனைக் குழு ஊழியர்கள் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொ.மு.ச. கவுரவத் தலைவர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், கோபால கிருஷ்ணன், செந்தில்வேலன், தொகுதி செயலாளர்கள் வடிவேல், தியாகராஜன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி, தொ.மு.ச. நிர்வாகிகள் நாதன், ராஜசேகர், மெய்யப்பன், விஜயரங்கன், சுதாகர், அன்பழகன், சக்திவேல், முனுசாமி, கதிரேசன், ஜூலி, சீனுவாசன், பரந்தாமன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






