என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா
    X

    பொதுமக்களுக்கு இனிப்புகளை தி.மு.க. பொறுப்பாளர் கோபால் வழங்கிய காட்சி.

    புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

    • உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் அமைந்துள்ள புனித வனத்த அந்தோணியர் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட தொகுப்பையும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் அமைந்துள்ள புனித வனத்த அந்தோணியர் ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்றது.

    பங்குதந்தை அல்போன்ஸ் சந்தானம் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் தி.மு.க. பொறுப்பாளர் கோபால் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட தொகுப்பையும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர்கள் கந்தசாமி, சசிகுமார், அகிலன், இளைஞர் அணி தாமரைக்கண்ணன், வேலு, பில்லா, ஜேம்ஸ், ராஜா, சாலமன், ஹன்றி, சண்முகம், சேட்டு, முரளி, ஸ்டீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×