search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருக்காஞ்சி கிராமத்தில் சிறப்பு துப்புரவு பணி
    X

    துப்புரவு பணி விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருக்காஞ்சி கிராமத்தில் சிறப்பு துப்புரவு பணி

    • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
    • அதிகாரி நரேந்திரன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பு துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    உழவர்கரை நகராட்சி ஆணையர் எழில்ராஜன் வாரத்தில் ஒரு நாள் கிளீன் புதுவை, கிரீன் புதுவை என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியில் ஊழி யர்கள் ஈடுபட வேண்டும் என உத்தர விட்டார். அதன்பேரில் தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நரேந்திரன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பு துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மங்கலம் தொகுதி திருக்காஞ்சி கிராமம் தத்தெடுக்கப்பட்டு சிறப்பு துப்புரவு பணி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணி திருக்காஞ்சி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று குப்பை களை வீதியில் கொட்ட வேண்டாம் என முழக்க மிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். பிறகு கிராமம் முழு வதும் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியா ளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் ஆணையர் எழில்ராஜன், இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், சீனியர் மேற்பார்வையாளர் விக்னேஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×