என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சக்தி சோலைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோப்பு படம்.

    சக்தி சோலைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடை பெற்றன.
    • பாலகணபதி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும், ராஜகோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரில் பிரசித்தி பெற்ற சக்தி சோலைவாழியம்மன் கோவில் உள்ளது.

    100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடை பெற்றன.

    மேலும் புதிதாக 2 நிலை கருவறை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கு கிறது.

    (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 31-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

    1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு பாலகணபதி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும், ராஜகோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை 10.15 மணிக்கு சக்தி சோலைவாழியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சக்திசோலை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×