என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சென்டாக் மாணவர் சேர்க்கை கமிட்டி பின்பற்ற வேண்டும்
    X

    கோப்பு படம்.

    சென்டாக் மாணவர் சேர்க்கை கமிட்டி பின்பற்ற வேண்டும்

    • இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • புதிய விதிமுறைகளை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி பின்பற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர் பெற்றோர் நலச்சஙக தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் அறிவுறுத்தலின் படி இந்த கல்வியாண்டில் 2023-24 முதல் கட்ட முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 8-ந் தேதி அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    இந்த கல்வியாண்டு 2023-24 மருத்துவ கலந்தாய்வு கமிட்டியின் புதிய விதிமுறைகளின் படி 1 மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வு 3-ம் கட்ட கலந்தாய்வு மற்றும் இறுதி கட்ட கலந்தாய் என 4 கலந்தாய்வினை இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் மாணவர் சேர்க்கை நடை பெறும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்களும், இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

    எனவே இந்த 2023-24 கல்வி ஆண்டு மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×